பொங்கல்; Pongal Wishes in Tamil
தமிழ்நாட்டில் பிரபலமாக கொண்டாடப்படும் பல விழாக்கள் உள்ளன.ஆனால் மிகவும் பிரபலமாகவும் பாரம்பரியமாகவும் கொண்டாடப்படும் ஒரே விழா பொங்கல் விழா தான் போகி,மாட்டுப் பொங்கல்,தைப் பொங்கல் மற்றும காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் வச்சி செய்யுற ஒரே விழா பொங்கல்.கிராமப்புறங்களில் தான் பொங்கலே கலை கட்டும்.அதுமட்டுமல்லாது பொங்கல் சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெறும்.இவ்வாறு பல சிறப்புகள் வாய்ந்த பொங்கல் விழா எப்படி தொடங்கியது என்றால் உழவர்கள் அதாவது விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் மாதமாக தை மாதம் உள்ளதால் அதனை உள்ளம் பொங்க பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.இதுவே பாரம்பரிய மிக்க பொங்கல் விழா உருவானதன் நோக்கமாக உள்ளது.அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் பொங்கல் விழாவிற்கு வாழ்த்து கவிதைகள் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் தற்போது சில வருடங்களாகவே நடைமுறையில் உள்ளது.பொங்கல் வாழ்த்து கவிதைகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது.படித்தும் பகிர்ந்தும் பொகிழுங்கள் கவிதைகளை;ஊரோடும் உறவோடும் கொண்டாடுங்கள் பொங்கலை....
போகிப் பண்டிகை வாழ்த்து கவிதைகள்;
என் அன்பான தமிழ் சொந்தங்களுக்கு போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்
பொன்னும் பொருளும் வேண்டாம்;போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு அன்பு காட்டும் உள்ளங்கள் போதும்;அன்பு காட்டும் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள்
இல்லத்தில் வாழும் இதயங்களில் இன்மகிழ்ச்சி பொங்கிட போகியை கொண்டாடிடுங்கள் இனிதாய்
இல்லங்கள் தோறும் இன்பம் பெருகிட உள்ளங்கள் தோறும் ஒற்றுமை வளம் பெற போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்
தமிழ்க்குடியின் பெருவிழாவின் முதல் விழாவான போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்
உழவின் உன்னதத்தை போற்றும் திருநாளில் ஒரு நாளான போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள்
வயலில் ஏற்றம் இறைத்த விவசாயிகள் இன்னும் வாழ்க்கையில் ஏற்றத்தை காணாவில்லை;விவசாயிகளின் பெருவிழாவில் ஒரு விழாவான போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்
உள்ளம் நிறைந்த என் உயிர் உறவுகளுக்கு இனிய போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்
உழைத்து களைத்த விவசாய சொந்தங்களுக்கு இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்
என் இதயத்தில் வாழும் நல்ல உள்ளங்களுக்கும்,எனக்கு இதயத்தில் இடமளித்த நல்ல உள்ளங்களுக்கும் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்
பழையன கழிந்து புதியவை மலர்வதே போகிப்பண்டிகை ஆகும்...இங்கு பழையது என்பது பொருட்கள் மட்டும் அல்ல;சில பழைய எண்ணங்களும் கூடத்தான்;காலம் மாறிவிட்டது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
நல்ல உறவுகளை உருவாக்கிக் கொள்வது எவ்வளவு கடினமோ அதே போல் நல்ல உறவுகள் அமைவதும் கடினம் தான்;என்னை உணர்வுகளால் கட்டிப்போடும் என் உறவுகளுக்கு இனிய போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்
நெஞ்சம் நிறைந்து நினைவில் அடர்ந்த என் அன்பான குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் இனிய போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்
கல்லை கடவுளாக்கினார்கள் அந்த காலத்தில் கடவுளை கல் என்கிறார்கள் இந்த காலத்தில் ... இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள்
போகி அன்று வீட்டில் இருக்கும் பழையதை மட்டும் தூக்கி எறியாதீர்கள்,மனதில் இருக்கும் பழைய எண்ணங்களையும் தூக்கி எறியுங்கள்
உலகெங்கும் வாழும் அன்னை மொழி அன்பர்களுக்கும் என் அன்பிற்குரியவர்களுக்கும் இனிய போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்
ஊரோடும் உறவோடும் தேரோடும் வீதியில் போகியை கொண்டாடி மகிழுங்கள்
இந்த போகிப் பண்டிகையில் பழையதை எரித்து கொண்டாடுவதை விட,காற்றை மதித்து மாசுபடுத்தாமல் கொண்டாடுங்கள்
கிராமங்களாக இருந்து வளர்ச்சி என்ற பெயரில் கட்டிடங்களாய் வளர்ந்து நிற்கும் நகரங்களே பொங்கல் பண்டிகையின் உண்மையான மகிழ்ச்சியை உணர கிராமங்களுக்கு செல்லுங்கள்
பழையதை எரித்தால் புதியவை வாங்கலாம் இது போகிப் பண்டிகையில்;இன்றோ எதை எரித்தாலும் காற்று மாசுபாட்டை தான் வாங்க முடியும்
விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்போம் மதிப்போம் இனிய போகிப் பண்டிகை வாழ்த்துக்கள்
காலம் மாறி போனாலும் மாறாத மாரிக்கு மரியாதை செலுத்துவோம் இந்த நன்னாளில்
கற்றறிந்தோர் கலப்பை பிடித்தால் இந்தியாவின் எதிர்காலம் ஏற்றம் காணும்;இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள்
இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்து கொள்ள என்னுடன் இருக்கும் நல்ல உள்ளங்களுக்கு இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள்
அன்பை கேட்காமலே தரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்
தைப்பொங்கல் வாழ்த்து கவிதைகள்;
தமிழர் பெருவிழாவான பொங்கலை ஊரோடும், உறவோடும், உள்ளங்கள் தோறும் உற்சாகமும், இல்லங்கள் தோறும் இன்பமும் இனிதே பொங்கி பெருகிட பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
உள்ளமும் இல்லமும் நிறைந்து சுற்றமும் சொந்தமும் இணைந்து அழகாய் ஆனந்தமாய் பெரிதாய் பேரின்பமாய் கொண்டாடுங்கள் இந்த பொங்கல் திருநாளை
அறுவடைத் திருநாளில் அனைவர் மனதிலும் மகிழ்ச்சியிலும் மங்காத இன்பமும் பொங்கி பெருகிட இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
தேசங்கள் கடந்து திரவியம் தேடிக்கொண்டிருக்கும் எம் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
திக்கெட்டும் வாழும் எம் தமிழ் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
மனசு முழுக்க சந்தோஷம் நிறஞ்சு சொந்த பந்தங்களோட வாசல் நிறைய கோலமிட்டு வயிறு நிறைய பொங்கல் வச்சு கோலாகலமாக கொண்டாடுங்கள் இந்த பொங்கல் பண்டிகையை
இந்த பொங்கல் திருநாளில் எல்லோர் மனதிலும் சந்தோஷமும், நிம்மதியும் பொங்கி பெருகி வாழ்க்கையில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரட்டும்
இதயம் நிறைந்த இன்னுயிர் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இந்த பொங்கல் நன்னாளில் வையகத்து மக்களின் வயிற்றை நிரப்பும் விவசாயிகளை வாழ்த்துவோம்
ஏற்றி வைக்கும் தீபமாய் ஏற்றம் இறைத்த உழவனின் வாழ்க்கை உயர்வு பெற இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
காலை கதிரவனின் ஒளியாய் வயலும் வாழ்வும் பளிச்சிட இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
விவசாயிகளின் திருவிழாவான பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழும் தமிழ் உள்ளங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தரணியாண்ட தமிழனின் திருநாளான பொங்கலை அனைவரும் கொண்டாடி மகிழுங்கள்...
ஒவ்வொரு பொங்கலிலும் கொண்டாட்டங்கள் விதவிதமாய் மாறுகின்றனவே தவிர விவசாயிகளின் திண்டாட்டங்கள் குறைவதே இல்லை;விவசாயத்தை உயர்த்துவோம் விவசாயிகளை காப்போம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
காலம் கடந்தும் கலை மாறாத பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
வழி மாறாமல் வாழ வைக்கும் விவசாய குடும்பங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கி வரும் அரிசி போல் பொங்கி வழியட்டும் மகிழ்ச்சி எல்லோர் மனதிலும்
மாட்டுப்பொங்கல் வாழ்த்து கவிதைகள்;
பால் பொங்கிடுச்சா அத்தே....பால் பொங்கிடுச்சா மாமா னு பொங்கல் வச்சி சாமி கும்பிட்டதும் முறைக்காரர்களிடம் கேட்டு மகிழ்வதில் அளப்பறிய ஆனந்தம்
உழவுக்கும் உழவனுக்கும் உற்ற துணையாக இருக்கும் மாடுகளை போற்றுவோம்; இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
காளைகளை அடக்கும் காளையர்களுக்கு இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்
காளைகளை அடக்கும் காளையர் களுக்குள் காளையர்களை காண வந்த கன்னிகளுக்கும் பெற்றவர்களுக்கும் பெரியவர்களுக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
வயலுக்கும் சரி வாழ்க்கைக்கும் சரி மாடுகள் மிகவும் அவசியம்; உணர்ந்து செயல்படுவோம்; இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தாயில்லா பிள்ளைகளுக்கு தாயின் ஸ்தானம் பசுக்களுக்கே...இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
மா-க்களுக்கும் மக்களுக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உழவுக்கும் உயர்வுக்கும் உற்ற துணையாகவும் உறுதுணையாகவும் இருக்கும் மா-க்களுக்கும் அவற்றை பராமரிக்கும் மக்களுக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
விவசாயத்தையும் விவசாயிகளையும் இன்றளவும் காத்து வருவது மாடுகளே;இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்
உழைப்புக்கும் சரி பிழைப்புக்கும் சரி மாடுகள் தான் ஏற்றது; மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
மாடுகளின் வயிற்றை நிரப்பாமல் எந்த விவசாயியும் தன் வயிற்றை நிரப்பியதில்லை...
இன்று ஏர்க்கலப்பைகள் குறைத்திருக்கலாம் ஆனால் ஒருநாளும் எருதுகள் குறையாது.
காணும் பொங்கல் வாழ்த்து கவிதைகள்;
திரவியம் தேடி திக்கெட்டும் திரிந்து கொண்டிருக்கும் சொந்தங்களையும் பந்தங்களையும் பார்த்தும் அன்பை பகிர்ந்தும் கொண்டாடி மகிழுங்கள் காணும் பொங்கலை
தீவுகளாய் மாறிப்போன குடும்ப வாழ்க்கையில் சொந்த பந்தங்களை தேடி அன்பால் கூடி மகிழ ஆண்டில் ஒருநாள்,காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தினம் புதிதாய் அலைபேசியில் கண்டு மகிழ்ந்தாலும் காணும் பொங்கலில் கண்காட்சியோ பொருட்காட்சியோ செல்வதில் அளவில்லா ஆனந்தம்
பூங்காக்கள் சென்று தெரியாத புது முகங்களுடன் நட்பு பாராட்டுவது நகர வாசிகளின் காணும் பொங்கல்;விளையாட்டு போட்டிகள் என்ற பெயரில் தெருக்களில் ஊரையே கூட்டி கொண்டாடுவது கிராமத்து காணும் பொங்கல்
இதயங்களில் இடைவெளிகள் குறைந்து சொந்தங்கள் பேதங்கள் மறந்து ஊரோடும் உறவோடும் கொண்டாடி மகிழுங்கள் காணும் பொங்கலை
மெரினாவில் கடலலைகளை வேடிக்கை பார்க்க கடலென மக்கள் கூட்டம் திரளும் நாள் காணும் பொங்கல்
யாருக்கும் யாரும் தூரமுமில்லை பாரமுமில்லை என்பதை உணர்ந்து உறவுகளோடு கொண்டாடுங்கள் காணும் பொங்கலை
சொந்தங்களால் இல்லம் நிறைந்து நட்புகளால் உள்ளம் நிறைந்து மகிழ்ச்சியால் கண்கள் நிறைய இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
உரிமையோடு பழகுவதற்கும் கேட்பதற்கும் இங்கே இருப்பது உறவுகளும் நட்புகளுமே; இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
புத்தாடை போல் பளிச்சிடட்டும் உள்ளங்களும் உறவுகளும் இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்