Tamil Love Song Lyric Quotes
1.Movie Name: சில்லுனு ஒரு காதல்
நிலவிடம் வாடகை வாங்கி…
விழி வீட்டினில் குடி வைக்கலாமா…
நாம் வாழும் வீட்டுக்குள்…
வேறாரும் வந்தாலே தகுமா…
தேன் மழை தேக்குக்கு நீ தான்…
உந்தன் தோள்களில் இடம் தரலாமா…
நான் சாயும் தோள் மேல்…
வேறாரும் சாய்ந்தாலே தகுமா...
2.Movie Name: உனக்கும் எனக்கும்
ஒரு நியாபக அலை என வந்து
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே
என் வாலிப திமிரை உன்னால்
மாற்றினேன்
பெண்ணாக இருந்தவள்
உன்னை நான் இன்று காதலி செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே நான்
உன்னில் மறைமுகமானேன்
நரம்பெல்லாம் இசை மீட்ட
குதித்தேன் நானே
கண்ணாடி நீ கடிகாரம் நான்
உன்னுள்ளே ஓடிஓடி வாழ்வேன்
காதல் என்னும் கடிதாசி நீ
என்றென்றும் அன்புடன் நான்
3.Movie Name:உன்னை நினைத்து
நதியாக நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையகிறேன்...
இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம்வரை உயிர்
வாழ்கிறேன்...
முதல் நாள் என்மனதில் விதயாய்
நீயிருந்தாய்..
மறுனாள் பார்க்கையிலே மரமாய்
மாறிவிட்டாய்....
நாடிதுடிபோடு நடமாடி நீ வாழிராய்
நெஞ்ஜில் நீ வாழ்கிறாய்.....
4.MOVIE NAME: அங்காடித் தெரு
உன் கறுங்கூந்தல் குழலாகத்தான்
எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான்
ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த
மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த
வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லை
பெண்ணே பெண்ணே
உன் பேரை சொல்லும் போதே உள்
நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர்
வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
5.MOVIE NAME: மதராசப்பட்டினம்
வார்த்தை தேவையில்லை…
வாழும் காலம் வரை பாவை
பார்வை மொழி பேசுமே…
நேற்று தேவை இல்லை…
நாளை தேவையில்லை…
இன்று இந்த நொடி போதுமே…
வேரின்றி விதையின்றி…
விண் தூவும் மழை இன்றி…
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே…
வாள் இன்றி போர் இன்றி…
வலிக்கின்ற யுத்தம் இன்றி…
இது என்ன இவனுக்குள்
என்னை வெல்லுதே…
இதயம் முழுதும் இருக்கும்…
இந்த தயக்கம் எங்கு கொண்டு
நிறுத்தும்…
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்…
அது கிடைத்தால் சொல்ல வேண்டும்
எனக்கும்…
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…
உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே…
நேற்றுவரை நேரம் போகவில்லையே…
உனது அருகே நேரம் போதவில்லையே…
எதுவும் பேசவில்லையே…
இன்று ஏனோ எதுவும்
தோன்றவில்லையே…
இது எதுவோ…
இரவும் விடியவில்லையே…
அது விடிந்தால் பகலும்
முடியவில்லையே…
6.MOVIE NAME: ஆடுகளம்
மழைச்சாரல் விழும் வேளை
மண்வாசம் மணம் வீச
உன் மூச்சி தொடுவேன்
நான் மிதந்தேன்
ஹோ... கோடையில அடிக்கிற மழையா
நீ என்னை நனைச்சாயே
ஈரத்தில அணைக்கிற சுகத்த
பார்வையிலே கொடுத்தாயே
பாதகத்தி என்னை
ஒரு பார்வையால கொன்ன
ஊரோட வாழுற போதும்
யாரோடும் சேரல நான்
7.MOVIE NAME: தாண்டவம்
இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சோர்த்து விடும்
ஓ... கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதில் செய்யும்
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பெய் பூட்டு போனது
வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்
8.MOVIE NAME: உதயம் NH4
எங்கே உன்னை கூட்டிச்செல்ல…
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல…
என் பெண்மையும் இளைப்பாறவே…
உன் மாா்பிலே இடம் போதுமே…
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே…
மெதுவாக இதயங்கள் இணைகிறதே…
உன் கைவிரல் என் கைவிரல்
கேட்கின்றதே…
யாரோ இவன் யாரோ இவன்…
என் பூக்களின் வேரோ இவன்…
என் பெண்மையை வென்றான் இவன்…
அன்பானவன்…
9.MOVIE NAME: மயக்கம் என்ன
அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம்
தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..
உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..
10.MOVIE NAME: ரிதம்
கார்காலம்மழைக்கும்போது
ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும்
அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான்
உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம்
கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில்
காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில்
காதலும் வாழ்க
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக்
கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன்
காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ
சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச்
சென்றாய்