Sad Quotes in Tamil:
இந்த பதிவில் அணுவில் ஆயிரம் வலிகளை சுமந்து அதையும் தாண்டி வாழ்க்கையில் எதையோ யாரையோ சமாளிக்கவும் சகித்துக்கொள்ளவும் சிரித்துக் கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களின் சிரிப்பிற்கு பின்னால் உள்ள வலிகளை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே பிரதானமாக எடுக்கொள்ளப்பட்டுள்ளது.
சிரிப்பிற்கு பின்னால் இருக்கும் வலி கவிதைகள்:
என்னதான் நம்முடன் நிறைய மனிதர்கள் சொந்தக்காரன்,நண்பன் என்ற பேர்களில் இருந்தாலும் நவீன இந்த காலத்தில் நம்முடைய வலிகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.காரணம் prestige என்ற ஸ்டேட்ஸ்க்குள் எல்லோரும் தனிமரமாகி போய்விட்டோம்.
மாதம் தோறும் தவணை கட்டுகிறேன் வாங்கிய கடனுக்கு,ஆனால் தினந்தோறும் அழுதாலும் தீர்வதில்லை நினைவுகளின் வட்டியும் அசலும்
Woman's day Quotes in Tamil - மகளிர் தின வாழ்த்து கவிதைகள் படிக்க
என்னை காயப்படுத்தியவர்களுக்கு
கூட என் நிலைமை வந்து விட
கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.
வலிகளை கூட தாங்கி
கொள்ளமுடிகிறது...ஆனால்
வலிக்கவே இல்லை என்பதை
போல் சிரிக்க வேண்டும் என்ற
சூழ்நிலை தான் வலிக்கிறது...
நாள்தோறும் மகிழ்ச்சியாய் இருக்க ஆசைதான்....ஆனால் கவலைகளை மறப்பது எப்படி என்று தான் இங்கு பலருக்கும் தெரிவதில்லை.
Life sad Quotes in Tamil
எவ்வளவு தான் அழுது தீர்த்தாலும் ஆறுதல் அடைவதில்லை அகம்....
மனதில் இருக்கும் காயங்களை உதட்டில் வடியும் புன்னகையால் சரிகட்டுகிறது உள்ளம்
வலிகளை சுமப்பதோ அனுபவிப்பதோ கூட இங்கு வலி இல்லை.அதை மறைப்பது தான் பெரிய வலி.
புன்னகையை நேசிக்கும்
எல்லோராலும் மகிழ்ச்சியில் புன்னகைக்க முடியவில்லை
Life sad Quotes in Tamil about life - Sad life quotes tamil
சிலரது வார்த்தைகள் இங்கே ஆறுதலாக இருந்தாலும் அது பொய் என்று தெரியும் நொடியில் உடைகிறது உள்ளம்.
எவ்வளவு சிக்கனமாய் இருந்தாலும் நினைவுகள் எனும் கோட்டையை கட்ட மறப்பதில்லை உள்ளம்
அழுத நொடிகள் எனக்குள் மௌனமாய், சிரிக்கும் நொடிகள் வெளிச்சத்தில் பிம்பமாய் இருப்பது தான் என் வாழ்க்கை
நினைக்கும் பொழுது இறககும் வரம் எல்லோருக்கும் கிடைத்தால் இங்கு யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்
Life sad Quotes tamil - Tamil Sad Quotes about life
கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க ஒரு புன்னகை சிறந்த வழி. அது போலியாக இருந்தாலும் சரி. சரியாகப் பயன்படுத்தினால், எதையும் சமாளிக்கலாம்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை தேடி தான் வாழ்க்கை பயணிக்கிறது.ஆனால் கிடைப்பது என்னவோ எதிர்பார்க்காதது தான்.
சிரிக்கும் பொழுது லேசாகும் இதயம் நினைக்கும் பொழுது கனக்கிறது மீண்டும்
மகிழ்ச்சியை தேடி அலைவதில் பயனில்லை என்று இருந்த மகிழ்ச்சியை தொலைத்த பிறகு தான் தெரிந்தது.
நொந்து போன மனதில் நோய் வந்தால் என்ன?வராமல் இருந்தால் என்ன?
Sad Quotes about life in tamil - sad life quotes tamil
ஆறுதல் தேடி அலைந்தால் அவஸ்தை மட்டும் தான் மிஞ்சும் ...
என்னதான் எதார்த்தமாய் பழகினாலும் எதையோ எதிர்ப்பார்த்து பழகும் சுற்றத்திடையே மகிழ்ச்சி என்பது எட்டாக்கனியே...
புன்னகை பேண்ட்-எய்ட் போன்றது, அவை காயத்தை மறைக்கும். ஆனாலும் வலி மறைவதில்லை
நான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பதால் எனக்கு கவலைகளே இல்லை என்று அர்த்தம் இல்லை
மகிழ்ச்சியான புன்னகையின் பின்னால் ஆயிரம் உணர்வுகளை மறைக்கும் எளிய மனிதன் நான்
என் கண்கள் சிந்தும் கண்ணீரை
என் உதடுகள் உதிர்க்கும் புன்னகையால் மறைத்து கொள்கிறேன்
Feeling Sad Quotes in tamil - Sad Kavithai - Sad Kavithai in tamil
வாழவேண்டும் என்ற ஆசையே
வரமறுக்கிறது...வரம்புகளற்ற
சில வார்த்தைகளால்...
அழவே தோன்றுவதில்லை
அவஸ்தைகள் அதிகமானதால்...
இங்கு ஆறுதல் சொல்கிறேன்
என்ற பெயரில் நம்மை குத்திக்
காட்டுபவர்கள் தான் அதிகம்....
நமக்காக யாருமில்லை
என்று நினைத்து அழுதேன்
அழுது முடித்த பிறகு
நான் புரிந்தது...ஏன் அழுகிறாய்
என்று கேட்க கூட இங்கு யாருக்கும்
மனமில்லை என்று...
Sad Motivational quotes in tamil - life Sad dp in Tamil
புன்னகையால் மறைத்து வைக்கும் சோகங்களை உன் கண்கள் காட்டிக்கொடுத்து விடும்
பொய்யான புன்னகையால்
மெய்யான மகிழ்ச்சியை
ஒருநாளும் தரமுடியாது.
வலிகளை மறைக்க உதவும்
புன்னகை ஒருநாளும் வலிகளை
குறைக்காது
பிரகாசமாக சிரிக்கும் பலரின்
வாழ்க்கை இங்கு பிரகாசமாக
இருப்பதில்லை
இங்கு பலரின் புன்னகை
பல காயங்களை மறைத்து
வைக்கும் முகமூடியாகவே
பயன்படுகிறது.
Depressed Sad Quotes in Tamil - life Sad dp in tamil
அழகான புன்னகையின்
பின்னால் இங்கே ஆழமான
ரகசியங்கள் பாதுகாக்கப்படுகின்றன
போலியாக சிரிப்பவர்களுக்கு
எப்பொழுதும் ஒரு ஆசை
இருந்து கொண்டே இருக்கும்,யாரோ
ஒருவர் என் புன்னகையின் பின்னால்
இருக்கும் வலியை உணர்ந்து கொண்டு
என்னை அருகில் அழைத்து உன் நிலையை என்னோடு பகிர்ந்து கொள்
என்று கூறமாட்டார்களா என்று?
உங்கள் புன்னகையை வேண்டுமானால்
உங்களால் பொய்யானதாக மாற்றிக்கொள்ள முடியும்,ஆனால் உங்களுடைய உணர்வுகளை பொய்யாக்கவே முடியாது...
பகல் முழுக்க படர்ந்திருக்கும்
புன்னகை,இரவில் எரியும்
கண்ணீராய் கரைகிறது இங்கே
உங்கள் புன்னகையின் பின்னால்
உடைந்து போயிருக்கும் உங்கள்
உள்ளத்தை யாராலும் உணர முடியாது
Sad Feeling Quotes in Tamil - Sad Tamil Images
உங்களுடன் அதிகமாக சிரிக்கும் ஒருவர் சில சமயங்களில் உங்கள் முதுகின் பின்னால் அதிகமாக முகம் சுளிக்கலாம்
வாழ்க்கை சில நேரங்களில் நம்மை
பரிதாபமான சூழ்நிலைக்கு கொண்டு
சென்று விடும், நம் சோகத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை விட புன்னகையின் மூலம் அதை மறைத்துக் கொண்டு வாழ சொல்லும்
ஒரு போலி புன்னகையானது ஏதேனும் மோசமான நிகழ்வைத் தடுக்கலாம், ஆனால் அது மேலும் தவறான புரிதலை உருவாக்கலாம்
வலியை அளவிடுவது எப்போதும் கண்ணீரால் அல்ல. சில நேரங்களில் அது நாம் போலியான புன்னகையாளும் அளவிடப்படுகிறது.
என் போலியான புன்னகைகளின் பின்னால் என் சோகங்களை பகிர்ந்து கொள்ள யாருமில்லை என்ற தனிமை இருக்கிறது.
Soga Kavithai Tamil - Sogam Quotes in Tamil
உங்கள் புன்னகையின் பின்னால் இருக்கும் வலியை யாரால் பார்த்து உணர முடிகிறதோ அவரே உண்மையான நண்பர்
வெளியே சிரித்துக் கொண்டிருக்கும் நான் உள்ளே சிதைந்து கொண்டு இருக்கிறேன்.
சிந்தும் கண்ணீரை மறைக்க சிரிப்பு எனும் போர்வை போர்த்துகிறது
என் முகம்
ஒவ்வொரு போலி புன்னகையின் பின்னாலும் உடைந்த இதயம் இருக்கிறது.
Feeling Sad Kavithai:
என்ன நடக்கிறது என்று
உணரும் முன் முன்னேறி
செல்கிறது வாழ்க்கையின்
நொடிகள்....
எதையோ இழந்ததை போலவே
இருக்கிறது என் இதயம்...
நம்பிய எல்லோரும் நம்பாமல்
போய்விட்டனர் என்னை...
கஷ்டங்கள் அதிகமாக அதிகமாக
கண்ணீர் வருவதில்லை
ஆறுதலுக்கு...
Pain Life Quotes in Tamil - Sad Life Status Tamil
பொருளானாலும் சரி
உறவானாலும் சரி
புதியது வரும் பொழுது
பழையது குப்பைக்கு
தான் செல்லும்
கடைசியில்
நமக்காக நாம்
மட்டும் தான் என்பதை
உணர்த்திவிடுகிறது
இந்த வாழ்க்கை...
பிறர் வலியை
புரிந்துகொள்ள முடியும்
என்னால் என் வலியை
மற்றவர்களுக்கு புரிய
வைக்க முடியவில்லை...
Sad Quotes in Tamil For WhatsApp - Tamil Sad Quotes Images
சில வார்த்தைகள்
உயிரை பறிக்கும்
அளவிற்கு வலிமை
உள்ளவை என்பது
வலித்த பிறகே தெரிகிறது...
எதைஎதையையோ
எதிர்பார்த்து
ஓடிக்கொண்டிருந்த என்
வாழ்க்கையில் இன்று
ஏமாற்றம் மட்டுமே மிச்சம்...
எல்லோரிடமும் அன்பாய்
பழகுவதை விடவும்
அளவோடு பழகினால்
உறவு நீடிக்கும்...
ஏன் வாழ்கிறோம் என்பதே
தெரியவில்லை சில
நேரங்களில்...
என் மீது என்னதான்
கோபமோ தெரியவில்லை
கடவுளுக்கு...
Sentimental Quotes in Tamil - Emotional Quotes in Tamil
கோபத்தை விடவும்
அழுகை தான்
வருகிறது..
காரணமில்லாமல் காயப்படும்
பொழுதெல்லாம்...
என் அழுகையோடு
விளையாடுவது விதிக்கு
வழக்கமாகிவிட்டது
யார் மீது அதிகமாக
அன்பு வைக்கிறோமோ
அவர்களை சீக்கிரம்
நம்மிடம் இருந்து
பிரித்து வைக்கிறது
வாழ்க்கை...
Emotional Quotes Tamil
தன்னந்தனியாய் நிற்கும்
பொழுது தான் தெரிகிறது
வாழ்க்கை எவ்வளவு
விசித்திரமானது
என்று
என்னதான் எல்லாரும்
வேண்டும் என்று
நாம் நினைச்சாலும்
நமக்கு மிஞ்சுறது
அவமானம் மட்டும் தான்