தமிழில் விடுகதைகள்-vidukathai in Tamil

Vizhimaa
0

Vidukathai in Tamil







Vidukathai in Tamil


1.அடிகளை வாங்கி நம்மை ஆட வைப்பான் அவன் யார்?


பதில்:பறை


2.திட்டி திட்டி தீயில் போட்டாலும்
அள்ளி அள்ளி அனலில் போட்டாலும்
வாரி வாரி வாசம் தருவான்
மனம் குளிர நறுமணம் தருவான்
அவன் யார்?


பதில்:சாம்பிராணி


3.அச்சில்லா சக்கரம்
அசைந்தாடும் சக்கரம்
அணிந்தால் அழகாகும்
பெண்ணின் கரம்
அது என்ன?


பதில்:வளையல்



4.உன் அறிவுக்கும் பொருளாவேன்
இரவின் அழகுக்கும் துணையாவேன்
நான் யார்?


பதில்:மதி(நிலவு)


5.காலில்லாமல் ஓடுவான் அவன்
யார்?


பதில்:பாம்பு



6.ஆயிரம் பேர் கட்டிய
அழகு மண்டபம் ஒருவர் கண்பட்டு
உருக்குலைந்து போனதாம் அது என்ன?


பதில்:தேன்கூடு


7.தொடமுடியாத உயரத்தில்
தொடர்ந்து வரும் ராணி;பகலில்
வெளிவராத தேனி அவள் யார்?


பதில்:நிலவு


8.ஒன்றினுள் அடைக்க முடியும் ஆனால் அல்ல முடியாது;உணர முடியும்,ஆனால் உருவம் இல்லாதது.அது யார்?


பதில்: காற்று


Riddles in Tamil-Tamil Vidukathaigal



9.ஒரு கால் மனிதனுக்கு உடலெல்லாம் கைகள்.அவன் யார்?


பதில்:மரம் 


10.உடல் முழுதும் ஓட்டைகளை கொண்டவன்;ஆனாலும் தண்ணீரை சேர்த்து வைப்பவன் அவன் யார்?

 
பதில்:ஸ்பான்ச்(sponge)



11.நாம் சாப்பிடுவதற்காக வாங்கும் ஒரு பொருளை கடைசி வரை சாப்பிட முடியாது அது என்ன? 


பதில்:தட்டு



12.இளமையில் உயரமாகவும் முதுமையில் குள்ளமாகவும் மாறுபவன் யார்? 


பதில்: மெழுகுவர்த்தி


13.எத்தனை மாதங்கள் 28 நாட்களை கொண்டுள்ளன?


பதில்: எல்லா மாதங்களும்


14.உள்ளே செல்வதற்கு எளிதாகவும் வெளியே வருவதற்கு கடினமாகவும் இருக்கும் அது என்ன?


பதில்:பிரட்சனைகள் 


15.முள் இருந்தும் குத்தாதவன் யார்?


பதில்: கடிகாரம்


தமிழ் விடுகதைகள் 400 with Answers 



16.உங்களுக்கு சொந்தமான ஒன்றை மற்றவர்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள் அது என்ன?


பதில்: உங்கள் பெயர்


17.சுலபமாக உடைக்க கூடிய ஒன்று ஆனால் உங்களால் அதை தொடமுடியாது அது என்ன?


பதில்: நீங்கள் செய்யும் சத்தியங்கள்



18.ஒரே கேள்வியை எத்தனை முறை கேட்டாலும் வெவ்வேறு பதில்கள் வரும் ஆனால் அந்த எல்லா பதில்களும் சரியானதாக இருக்கும்.அந்த கேள்வி என்ன?


பதில்:time என்ன?


19.நீங்கள் சாப்பிட கூடிய நிறம் (colour) என்ன?


பதில்: ஆரஞ்சு 🍊



20.ஒரு அறையின் அனைத்து இடங்களையும் இதனால் நிரப்ப முடியும் ஆனால் எந்த இடத்தையும் ஆக்கிரமித்து கொள்ளாது அது என்ன?


பதில்:ஒளி



21.எட்டுக் கை குள்ளனுக்கு ஒற்றை கால்
அவன் யார்?


பதில்:குடை



22.எல்லோரும் ஓய்வெடுத்தாலும் ஓய்வெடுக்காதவன் யார்?


பதில்: கடிகாரம்


Tamil Vidukathai with Answers-Tamil Vidukathaigal with Answers



23.ஒற்றைக்கால் ஆட்டக்காரன்
ஒய்யார ஆட்டக்காரன்
ஓயும் போது மண் சேருவான்
அவன் யார்?


பதில்:பம்பரம்



24.பகலிலெ நீல நிற சாலை
இரவிலே மஞ்சள் நிற சோலை
அது என்ன?


பதில்: வானம்


25.நடுங்க வைப்பான் அனைவரையும்
அடங்கி போவான் அனலிடம் அது என்ன?


பதில்:குளிர்



26.சாப்பாடு போட்டால் வளரும்
தண்ணீ கொடுத்தால் அழியும்
அது என்ன?


பதில்: நெருப்பு



27.ஒல்லி உடம்புக்காரன்
ஊரை எரிக்கும் குசும்புக்காரன்
அவன் யார்?


பதில்: தீக்குச்சி


28.துடித்துக்கொண்டே இருக்கும்
இதயமும் அல்ல;இரவு பகல்
விழித்துக் கொண்டே இருக்கும் 
மனிதனும் அல்ல.அவன் யார்?


பதில்: கடிகாரம்



29.கோபம் வந்தால் வாய் பேசுவான்
நன்றிக்கடனுக்கு வால் வீசுவான்
அவன் யார்?


பதில்:நாய்


Vidukathai in Tamil



30.உயரத்தில் பிறப்பான்
தாகத்தை தீர்ப்பான்
அவன் யார்?


பதில்:இளநீர்


31.வற்றாத நீர்
தாகம் தீர்க்க பயன்படாத 
நீர்: தண்ணீர் அல்ல அது என்ன?


பதில்: கண்ணீர்


32.அவன் அழுகையில் ஒளிந்திருக்கும்
வெளிச்சம் அது என்ன


பதில் : மெழுகுவர்த்தி


Vidukathai in Tamil with Answers-vidukathai in Tamil with Answer



33.ஒருத்தன் ஒட்டியதை இன்னொருவன் பிரிப்பான் அவன் யார்?


பதில்: கடிதம்



34.பொட்டு போல் இலை:முத்து போல்
பூ பூக்கும்;தின்னும் காய் கொடுக்கும்:தின்னாத பழம் கொடுக்கும்
அவன் யார்?


பதில்: முருங்கை மரம்



35.பிறப்பதும் தண்ணீரிலே இறப்பதும்
தண்ணீரிலே அவன் யார்?


பதில்:உப்பு


36.கண்ணில் தென்படும் அவனை
கையில் பிடிக்க முடியாது?


பதில்:புகை



37.ஆள் கொளுத்தும் வெயிலில்
ஆசாமி விளைகிறான் அவன் யார்?


பதில்:உப்பு



38.கை இருந்தும் விரல் இல்லாதவன்;
கழுத்து இருந்தும் தலை இல்லாதவன்;
உடல் இருந்தும் உயிர் இல்லாதவன் அவன் யார்?


பதில்:சட்டை


39.லட்சம் பேர் கொண்ட படை திரண்டாலும்
ஒரு தூசு, புழுதி கிளம்பாது அவர்கள் யார்?


பதில்: எறும்புகள்

விடுகதை வினா விடைகள்-விடுகதைகள்



40.வந்தாலும் சிக்கல் வரலனாலும்
சிக்கல்:அது என்ன?


பதில்: மழை



41.அவன் தலையை எடுத்தால் நம் தாகம் தீர்ப்பான் அவன் யார்?



பதில்:இளநீர்



42.ஆள்செல்லாத கிணற்றில் 
தாகம் தீர்க்கும் சீனி தண்ணி


பதில்:இளநீர்



43.ஒரே ஒரு உரசில் உயிரை மாய்த்து கொள்ளும் அது என்ன?


பதில்: தீக்குச்சி


Vidukathai Tamil with Answers



44.தாழ்ப்பாள் இல்லாமல் கதவு தானாக திறக்கும் மூடும் அது என்ன?


பதில்:கண் இமை



45.ஒரு குற்றம்,அதை செய்ய முயற்ச்சித்தால் தண்டனை கிடைக்கும்:ஆனால் செய்து விட்டால் அவனை தண்டிக்க முடியாது.
அந்த குற்றம் என்ன?



பதில்: தற்கொலை



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top